Thursday, September 11, 2008

அம்மா எங்கள் அம்மா

அம்மா எங்கள் அம்மா
அன்பை பொழியும் அம்மா
அவள் தரும் அன்னத்திலே
ஆயுள் இருக்குமே
கை மணக்கும் கத்திரிக்காய் சாம்பாரிலே
மெய் மணக்கும் நெய் வகை சாப்பிட்டிலே
சத்து தரும் கார வகை பொறியிலே
நமக்கு நன்மை தருமே
மெதுவடை காத்து இருக்கும் கடைசியிலே
காரவடை நிரந்து இருக்கும் இலைதனியிலே
பாயாசம் பதுங்கி இருக்கும் பாத்திரத்திலே
நெய் சாப்பாடு ஒளிந்து இருக்கும் குக்கரிலே
அத்தனையும் கிடைக்கும் சும்மாவே
அதனோடு முத்தமும்
அன்னை தரும் அன்னத்தை
ஒரு முறை ருசித்தால்
ஆயுள் முழுவதும் மணக்கும்
இனிய காலை வணக்கம்

No comments:

AMMA

AMMA